Sunday 23 January, 2011

துணைவியைக் கெடுத்த தூக்கம்

நாளுக்கு இடையில் வரும்
நடுநிசியில் வரும் பசியில்
பாலுக்கு அழும் மகனின்
பால்சென் றுதரும் மனைவி
தூயவளின் தொன்மைதனை
தூக்கிநி றுத்துங்கால் என்
தாயவளும் பட்ட துயர்
தவழ்கிற தென்நினை வுகளில்.

No comments: